இன்டர்நெட்டுக்கான அப்ளிகேஷன்கள் எத்தனையோ மொழிகளில் எழுதப்படுகின்றன. அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தனித்த கூறுகள் காம்பொனன்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரே மொழியில் எழுதப்பட்ட காம்பொனன்டுகள் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட காம்பொனன்டுகள் தமக்குள் உறவாடிக் கொள்ள வழிமுறை ஏதுமில்லை. அத்தகைய வழிமுறை இருக்குமெனில் இன்டர்நெட் உலகில் நினைத்துப் பார்க்க முடியாத நவீன முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது கண்கூடு. பல்வேறு பணித்தளங்களில் செயல்படக் கூடிய ஜாவா மொழி இத்தேவையை நிறைவு செய்யவில்லை.
பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புரோகிராம்களும் ஒன்றுக்கொன்று இயைந்து செயல்படக் கூடிய ஒரு பணித்தளத்தை (platform) உருவாக்குவதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கவனம் செலுத்தியது. இக்கால கட்டத்தில்தான், ஏற்கெனவே வெளியிடப்பட்ட விசுவல் ஸ்டுடியோவின் அடுத்த பதிப்பை வெளியிடும் வேலையில் மைக்ரோசாஃப்ட் ஈடுபட்டிருந்தது. தன்னுடைய சொந்தத் தேவை, புறச்சூழ்நிலைகளின் தாக்கம், சந்தையில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாக, மைக்ரோசாஃப்ட் 1990-களின் இறுதியில் டாட்நெட் (.NET) தொழில்நுட்பத்தை அறிவித்தது.
- நன்றி மு.சிவலிங்கம் -
No comments:
Post a Comment